மதிப்புக்குரிய ஐயா , எங்களுக்கு நில ஒப்படைப்பு பட்டா 1973ல், 1௦ சென்ட் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. அந்நிலத்தில் வீடு கட்டி வாழுந்து வருகிறோம். அந்நிலம் கிராம நத்தம் வகை பிரிவில் உள்ளது. ஆனால் கடந்த 47 ஆண்டுகளாக இந்த ஒப்படை பட்டா இன்னமும் கிராம கணக்கில் மற்றும் வருவாய் கணக்கில் பதியவில்லை.மேலும் இதனை கிராம மற்றும் வருவாய் அலுவலர் கணக்கில் பதிய மறுக்கின்றனர். தற்போது இதற்கு கோவில் எண்டவுண்மெண்ட் அலுவலர் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று கூறுகிறார். ஒரு கிராம நத்தம் நிலம் கோவில் நிலம் ஆகுமா? தயவு செய்து அறிவுரை கூறுங்கள்.
Please login or Register to submit your answer